shadow

மேகாலையா கவர்னர் சண்முகநாதன் திடீர் ராஜினமா

தமிழகத்தைச் சேர்ந்த மேகாலயா கவர்னர் சண்முகநாதன் நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் மாளிகைக்கு நேர்காணலுக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து சண்முகநாதன் பதவிவிலக வேண்டும் என்று கவர்னர் மாளிகை ஊழியர்கள் குடியரசு தலைவருக்கு புகார் அனுப்பியதாகவும் இதன் காரணமாக எழுந்த எதிர்ப்பு காரணத்தால் அவர் ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

மேலும் மேகாலய மாநிலத்தில் பல்வேறு மகளிர் நல அமைப்புகள் சண்முகநாதன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தியதால் சண்முகநாதன் ராஜினாமா முடிவுக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது ஆனால், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை சண்முகநாதன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்

இந்நிலையில் சண்முகநாதன் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.,

Leave a Reply