இந்தோனேசியாவில் 3 வாரங்களுக்கு முன்பு உலக அழகி போட்டி தொடங்கியது. முஸ்லிம்கள் பெரும்பான்மையானோர் வசிக்கும் இங்கு, உலக அழகி போட்டி நடத்துவது மதக்கொள்கைக்கு எதிரானது; வெட்கக்கேடானது என்று கூறி முஸ்லிம் பாதுகாப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும், சகோதரத்துவம், கலாசாரம் ஆகியவற்றை வலியுறுத்தி முஸ்லிம் இளம்பெண்களுக்கு என தனியாக உலக அழகி போட்டியும் நடத்தினர்.

எனினும், பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே உலக அழகி போட்டியின் இறுதி சுற்று, இந்துக்கள் அதிகம் வசிக்கும் பாலி தீவில் நேற்று நடந்தது. போட்டி நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 127 அழகிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இறுதி சுற்றில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேகான் யங் (23) உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் பிறந்தவர். டிஜிட்டல் பிலிம் தொழில்நுட்பம் பயின்று வருகிறார்.

கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட சீன அழகி வென்சியா யூ, அழகி பட்டத்தை மேகானுக்கு சூட்டினார். மருத்துவ மாணவிகள் பிரான்ஸ்சை சேர்ந்த மெரின் லார்ப் ஹெலின் (20), கானாவை சேர்ந்த கரான்ஷர் நா ஒஹாலி ஷூட்டர் (23) ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த அழகி நவ்னீத் கவுர், பல சுற்று போட்டிகளில் வென்று டாப் 20 அழகிகள் பட்டியலில் இடம் பிடித்தார். ஆனால், டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை. எனினும், மிஸ் வேர்ல்ட் வெப்சைட் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் ரசிகர்களுடன் நடந்த கலந்துரையாடல், வெளியிட்ட படங்களுக்கு கிடை த்த ஆதரவின் அடிப்படையில் மல்டி மீடியா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply