சமூக வலைத்தளத்தில் பரபரப்பு
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன், அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குள்ளாவார் என்பது தெரிந்ததே.
மீராமிதுன் ஆபாச புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதும், மீராமிதுனை ஆபாசமாக சித்தரிக்கும் புகைப்படக்களை நெட்டிசன்கள் பதிவு செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது
இந்த நிலையில் டுவிட்டர் பயனாளி ஒருவர் தனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்துள்ளதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த புகைப்படத்தை தமிழக முதல்வருக்கும் பிரதமருக்கும் டேக் செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சமூக ஊடகங்களில் நான் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். ஆனால் இந்த அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் உள்ளது என்றும் மீரா கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.