முதல்வருக்கு திடீர் மருத்துவ சோதனை. என்ன ஆச்சு அவருக்கு?
தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவ சோதனை செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நேற்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ், அதன் பின்னர் இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததாகவும், அதன் காரணமாக இன்று காலை அவர் மிகவும் சோர்வாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இன்று காலை தனியார் மருத்துவமனை மருத்துவர் குழு ஒன்று ஓபிஎஸ் வீட்டிற்கு வந்து அவருக்கு மருத்துவ சோதனை செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
எனினும் இன்னும் சிறிது நேரத்தில் அவர் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். ஒருபக்கம் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டமும், இன்னொரு பக்கம் முதல்வரின் செய்தியாளர் சந்திப்பும் நடைபெறவிருப்பதால் தமிழக அரசியல் பரபரப்பின் உச்சக்கட்டத்தில் உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.