கடந்த தீபாவளி தினத்தில் விஜய், சமந்தா நடித்து வெளியான ‘கத்தி’ திரைப்படம் உலக அளவில் எந்த தமிழ் சினிமாவுக் செய்யாத சாதனையை செய்தது. ரிலீஸான முதல் நாளில் ரூ.23.8 கோடி வசூல் செய்தது. அதேபோல் ரிலீஸான ஒரே வாரத்தில் சுமார் 90 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் வெற்றிப்படமாக திகழ்ந்தது. கடந்த ஒரு வாரமாக ஊடகங்களும் கத்தி படத்தை பற்றிய செய்திகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு வந்தன.
ஆனால் இந்த களேபரம் எல்லாம் ஒரே ஒரு வாரம்தான். நேற்று முன் தினம் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டவுடன் ஊடகங்கள் அனைத்தும் கத்தியை கைவிட்டு அஜீத் பக்கம் தனது பார்வையை திருப்பியது. மேலும் டைட்டில் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் உலக அளவில் டிரெண்டில் இரண்டாவது இடத்தையும் அஜீத் பட டைட்டில் பிடித்ததால், அஜீத் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர்.
‘கத்தி’யின் ஒருவார வசூலை ஒரே நாளில் ‘தல’ படம் வசூலிக்கும் என்றும், கத்தியின் வசூலை காணாமல் போக செய்வோம் என்றும் அஜீத் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிரட்டலான பதிவுகளை போட்டு வருகின்றனர். பெயர் அறிவிப்புக்கே உலக அளவில் டிரெண்டை ஏற்படுத்திய அஜீத் ரசிகர்கள் படம் ரிலீஸாகும் தினத்தில் என்ன செய்ய காத்திருக்கின்றனர் என்பது தெரியவில்லை என கோலிவுட் பிரபலங்கள் ஆச்சரிய பார்வை பார்த்து வருகின்றன
Leave a Reply
You must be logged in to post a comment.