shadow

12905_a-350x250

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் போன்றவைகள் அனைத்துமே டிஜிட்டல் சாதனங்கள் தான். இவைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதைப் பார்ப்போம். உட்புறம் மட்டுமின்றி வெளிப்புறமும் இது போன்ற சாதனங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் அவைகள் விரைவில் பழுதடையா வண்ணம் பாதுகாக்க முடியும். பல நேரங்களில் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவோர் கண்ணை கவரும் விதத்தில் உள்ள சாப்ட்வேர்களை டவுன்லோடு செய்து வைத்துக் கொள்கின்றனர்.

அவற்றின் பயன் அதிகமாக இருக்காத நிலையிலும், தொடந்து அவை கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் இடம்பெற்று விடுகின்றன. இது போன்ற தேவையில்லாத புரோகிராம்கள் கம்ப்யூட்டர் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மேலாக அதிகமாகிவிடும் நிலையில், அந்த டிஜிட்டல் சாதனங்களின் வேகம் குறைகிறது. தேவையற்ற புரோகிராம்களால் அவைகள் பழுதடைய வாய்ப்புகள் ஏற்பட்டுவிடும்.

கம்ப்யூட்டர் டெஸ்டாப்பில் சேவ் செய்தல்:

பெரும்பாலானவர்கள் மிக எளிதாக கோப்புகளை எடுக்க வசதியாக டெஸ்க்டாப்பில் கோப்புகளை சேமித்து விடுகின்றனர். இது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும். டெஸ்க்டாப்பில் கோப்புகள் சேர சேர கம்ப்யூட்டரில் செயல்படும் வேகத்திறனும் குறையும். எனவே வேறு போல்டர் ஒன்றை உருவாக்கி வேறு டிரைவில் சேவ் செய்து வைக்கலாம்.

கீபோர்ட் பாதுகாத்தல்:

கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது சிலர் நொறுக்கு தீனிகளை தின்று கொண்டே பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களை அறியாமலேயே கீபோர்டில் உணவு துணுக்குகள் விழுந்து விடுகின்றன. அது மட்டுமல்லாமல் தூசி, துகள்கள் என கீபோர்ட் இடுக்குகளில் சேர்ந்து விடுகின்றன. இதனால் கீபோர்ட்டில் உள்ள கீகள் சில நேரம் செயல்படாமல் போகும். சிலர் வருடக் கணக்காக கூட கீபோர்டை சுத்தம் செய்யாமலேயே வைத்திருப்பர். வாரம் இருமுறையாவது கீர் போர்டை சுத்தப்படுத்த வேண்டும்.

சாப்ட்வேர் அப்டேட் கட்டாயம்:

கம்ப்யூட்டரில் உள்ள சாப்ட்வேர்கள் சில நேரங்களில் அப்டேட் செய்யச் சொல்லி கேட்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் இதை செய்யாமல் குளோஸ் செய்து விடுகின்றனர். அது தவறு. அப்டேட் செய்யச் சொல்லும் போது தவறாமல் அப்டேட் செய்து விட வேண்டும். இதனால் பல்வேறு பிரச்சனைகள் தீரும்.

டபுள் செக்யூரிட்டி தேவை

மின்னஞ்ல், வங்கி கணக்குகள் போன்றவற்றை இணையம் வழியாக கம்ப்யூட்டரில் பயன்படுத்துபவர்கள் இரண்டு அடுக்கு பாதுகாப்பை கட்டாயம் செயல்படுத்த வேண்டும். இதனால் மால்வேர் புரோகிராம்களை அனுப்பி பாஸ்வேர்ட் திருடும் கூட்டத்திலிருந்து தப்பிக்கலாம். இரண்டு அடுக்கு பாதுகாப்பு என்பது மொபைல் மூலம் மெசேஜ் பெற்று, அந்த அக்கவுண்ட்டை திறப்பதாகும்.

டேட்டா பேக்கப்

டேட்டா பேக்கப் என்பது இதற்கு முன்பு நாம் கணினியில் பணிபுரிந்து வைத்திருக்கும் கோப்புகளை பேக்கப் எடுப்பதாகும். இதற்கு சாப்ட்வேர்கள் பல உள்ளன. ஒவ்வொரு புதிய கணினி பயனருக்கும் டேட்டா பேக்கப் பற்றி அறிவுரை தேவைப்படுகிறது. இது எதற்கென்றால் கம்ப்யூட்டர் ஏதாவது பழுதாகிடும் பொழுது, அதில் உள்ள டேட்டா அழியாமல் பாதுகாத்து, மீண்டும் கம்ப்யூட்டருக்கு கொண்டு வந்து பயன்படுத்திட தான். எனவே தவறாமல் டேட்டா பேக்கப் எடுப்பது அவசியம்.

உள்ளுக்குள் சுத்தம்

கம்ப்யூட்டரில் சேரும் தூசிகளால் அதை வெப்பத்திலிருந்து காத்திடும் காற்றாடிகள் பழுதடைகின்றன. இதனால் கம்ப்யூட்டரில் உள்ள உட்பாகங்கள் பிராசசர், ஹார்ட்டிஸ்க் போன்றவைகள் கெட்டுப் போகும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. எனவே தூசிகளை சுத்தம் செய்திட வேண்டும்.

அதிக வெப்பம் ஆபத்து…

அதிக வெப்பமாக உள்ள இடங்களில் கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சாதனங்களை வைத்து இயக்குவது ஆபத்தை விளைவிக்கும். இது போன்ற டிஜிட்டல் சாதனங்கள் அதிகபட்சமாக 35 டிகிரி வெப்பம் வரை தாங்கும். அந்த வெப்பநிலை உள்ள இடங்களில் மட்டுமே அவற்றை இயக்க வேண்டும்.

கிருமிகளின் உற்பத்தி இடம் மொபைல்

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் மொபைல் போன் கிருமிகள் உற்பத்தி ஆகும் இடமாகவே மாறிவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. என்ன காரணம் என்றால் அதைப் பயன்படுத்துபவர்கள் கைகளை நன்றாக கழுவுவதில்லையாம். இதனால் பலரும் பயன்படுத்தும் பொதுவான லேப்டாப், டேப்லட், செல்போன் போன்ற சாதனங்களில் அதிகமாக கிருமிகள் உற்பத்தியாகிவிடுகிறதாம்.

Leave a Reply