shadow

மதனின் மர்மமான மறைவுக்கு என்ன காரணம். தாயார் கூறும் திடுக்கிடும் தகவல்

madhanவேந்தர் மூவீஸ் எஸ்.மதன், கங்கையில் சமாதி அடைவதாக லட்டர் எழுதி வைத்துவிட்டு மாயமாகி கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகியும் அவரது நிலைமை என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அவர் உயிரோடு இருக்கின்றாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து கலவையான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவாகியுள்ளதாக அவரது தாயார் தங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இப்பிரச்சனை குறித்து பாரிவேந்தரிடம் பேச முயற்சித்தும் அனுமதியளிக்கவில்லை என்றும் தனது மகனை கண்டுபிடித்து தருமாறும் அவர் காவல்துறையினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் வேந்தர் மூவிஸ் மதன் கடந்த பல ஆண்டுகளாக எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டிருந்ததாகவும், அதற்காக பெறப்படும் பணத்தை முறையாக பாரிவேந்தரிடம் அளித்து வந்ததாகவும் கூறினார். மதன் காணாமல் போனது குறித்த காரணம் எதுவும் தங்களுக்கு தெரியவில்லை என்றும், பாரிவேந்தர், அவரது மகன் ரவி ஆகியோருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் மதன் தலைமறைவாகியிருக்கலாம் என்றும் தங்கம் கூறினார்.

இப்பிரச்சனைக்கு குறித்து பாரிவேந்தரிடம் பேச பலமுறை தாங்கள் முயற்சி செய்தும், அதற்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை என்றும், அவரின் குடும்பத்தினரை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் தோல்வியடைந்ததாக மதனின் தாயார் தெரிவித்தார்.

பாரிவேந்தரை கடவுளாக நினைத்து பூஜித்து வந்த தனது மகன் எஸ்ஆர்எம் குழுமத்திலிருந்தும், ஐஜேகே கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டது ஏன்? என்பது பற்றி தங்களுக்கு தெரியவில்லை என்றும் மதனின் தாயார் தங்கம் வேதனை தெரிவித்தார்.

இதனிடையே, காணாமல் போன மதனை தேடி கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சென்னை மற்றும் வாரணாசியில் மதன் குறித்து விசாரணையில் ஈடுபட உள்ளனர். இதில், ஒரு தனிப்படை இன்றிரவு வாரணாசி புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மதனின் தாயார் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

Chennai Today News: Mathan’s mother blames Parivendar for missing

கங்கையில் சமாதி அடைகிறேன். வேந்தர் மூவீஸ் எஸ்.மதனின் அதிர்ச்சி கடிதம்

Leave a Reply