shadow

brazil jailகவர்ச்சியாக உடையணிந்து வந்த மூன்று இளம்பெண்கள் சிறை வார்டன்களை மயக்கி 28 கைதிகளை தப்பிக்க வைத்த சம்பவம் பிரேசில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் ஊள்ள நோவாமட்டம் என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையில் இருந்த புருனோ அமோரி என்ற கைதியின் ஆலோசனைப்படி அவனுடைய காதலியும், இரண்டு பெண்களும் மிகக்கவர்ச்சியான உடையணிந்து சிறை வார்டன்களிடம் இனிமையாக பேசினர். சிறிது நேரத்தில் சிறை வார்டன்களுக்கு போதை மருந்து கலந்த விஸ்கியை கொடுத்து, அவர்கள் மயங்கி விழுந்தவுடன் அவர்களுடைய ஆடையை களைந்து மூவரும் அணிந்து கொண்டு சிறைக்குள் சென்றனர்.

அங்கிருந்த புருனோ அமோரி உள்பட சிறையில் இருந்து 28 கைதிகளை விடுவித்த அவர்கள் சிறையின் மெயின் வாசல் வழியாக சாவகாசமாக தப்பித்து சென்றனர். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தப்பிச்சென்ற புருனோ அமோரி உள்பட அனைவரும் தேடி வருகின்றனர். இதுவரை 8 கைதிகள் பிடிபட்டுள்ளதாகவும், விரைவில் அனைவரும் பிடிபடுவார்கள் என்றும் பிரேசில் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply