நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நேற்று சங்கரநாராயணன் என்பவருக்கும், அனுபாரதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நிமிடங்களில் இருவரும் மணக்கோலத்தில் மண்டபத்தை விட்டு வெளியே வந்து  ரத்ததானம் செய்ய முன்வந்தனர். இதனால் திருமண விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் மணமக்களை பாராட்டியதோடு அல்லாமல் அவர்களும் ரத்ததானம் கொடுக்க முன்வந்ததனர். அந்த இடத்திலேயே சுமார் 50 பேர்கள் வரை ரத்ததானம் செய்தனர்.

இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே நாங்கள் திருமணம் செய்தவுடன் ரத்ததானம் செய்துள்ளோம் என்றும், இதுபோல் அனைவரும் ரத்ததானம் செய்தால், பல உயிர்கள் காப்பாற்றபடும் என்றும் மணக்கோலத்தில் இருந்த சங்கரநாராயணன் தெரிவித்தார்.

Leave a Reply