shadow

ரஜினி மண்டையில மசாலா ஒண்ணும் இல்லையே! மார்க்கண்டேய கட்ஜூ

ஜல்லிக்கட்டு உள்பட பல விஷயங்கள் குறித்து பரபரப்புடன் கருத்து தெரிவித்து வரும் மார்க்கண்டேய கட்ஜூ, சமீபத்தில் ரஜினிகாந்த் தெரிவித்த அரசியல் கருத்து குறித்து தனது ஃபேஸ்புக்கில் கடுமையாக சாடியுள்ளார்.

அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், சினிமா நட்சத்திரங்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் படித்த சமயத்தில் ஒருநாள் தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசன் நடித்த படத்தை பார்க்கச் சென்றேன். அப்போது, படத்தின் தொடக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் காட்டும்போது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

தற்போது ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். அவர் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்றுகூட சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் ரஜினியிடம் என்ன இருக்கிறது? வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அவரிடம் தீர்வுகள் இருக்கின்றனவா? அவரிடம் ஒன்றும் இல்லை என்று நான் நினைக்கிறேன். பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை

மார்க்கண்டேய கட்ஜூவின் இந்த கருத்து ரஜினி ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது.

Leave a Reply