இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் நகரில் நேற்று நடைபெற்ற “ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்” போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் மரியா ஷரபோவாவும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.
நேற்று நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து நாட்டின் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அவர்களுடன், ஜோகோவிச் மோதினார். இந்த போட்டியில் 6-4,6-3 என்ற நேர் செட்களில் ஜோகோவிச் எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜோகோவிச் கைப்பற்றும் நான்காவது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுரஸ் அவர்களுடன் மோதினார். இந்த போட்டியில் 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்த ஷரபோவா பின்னர் சுதாரித்து கொண்டு அடுத்த சுற்றுகளில் 7-5, 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி, சாம்பியன் பட்டத்தை வென்றார்.
மரியா ஷரபோவாவுக்கும், ஜோகோவிச் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சென்னை டுடே நியூஸ் இணையதளம் சார்பில் நாங்களும் பட்டம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Leave a Reply
You must be logged in to post a comment.