shadow

TY04-03_JUNE_TNJ__G_120999f

செங்கல்பட்டு: சிங்கபெருமாள்கோவிலில் உள்ள, பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் சுவாமி கோவிலில், கருடசேவை உற்சவம் நேற்று, கோலாகலமாக நடைபெற்றது. செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில், பிரம்மோற்சவம், கடந்த 23ம் தேதி துவங்கி, ஜூன் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், மூன்றாம் நாள் உற்சவமான கருடசேவை, நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் வழிபாடு நடைபெற்றது. காலை 6:00 மணிக்கு, கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, கோபுர தரிசனம், மகா ஆரத்தி நடைபெற்றது. அதன் பின், வீதியுலா புறப்பட்டு மாடவீதிகள் வழியாக சென்று, காலை 11:30 மணிக்கு, கோவிலை வந்தடைந்தார். சிங்கபெருமாள்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமவாசிகள் ஏராளமானோர் கருட வாகன சேவையையும், கோவிலிலும் தரிசனம் செய்து வழிபட்டனர்.

Leave a Reply