ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை. தேர்தல் கமிஷனிடம் மனு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகிறார். மேலும் இந்த தொகுதியில் சசிகலா அணியின் சார்ப்பில் டிடிவி தினகரனும், திமுக அணி வேட்பாளராக மருது கணேஷ் என்பவரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் அதிமுக தற்போது இரண்டு அணியாக பிளவுபட்டு இருப்பதால் இரு அணிகளும் ஒன்றுபட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனோஜ்பாண்டியன் மனு கொடுத்துள்ளார். இந்த மனுவில் மதுசூதனன் மற்றும் ஓபிஎஸ் அணியினர் கையெழுத்திட்டுள்ளனர். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் வரும் 20ஆம் தேதிக்குள் முடிவு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.