shadow

manmohan-brother1_650_042514105126

பிரதமர் மன்மோகன் சிங்கில் ஒன்றுவிட்ட சகோதரர் இன்று பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இதனால் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நரேந்திரமோடி பிரச்சாரம் செய்ய வந்தார். அவருடன் பஞ்சாப் மாநில முதல்வரும் பிரகாஷ்சிங் பாதலும் கலந்துகொண்டார். அப்போது திடீரென மேடையில் தோன்றிய பிரதமர் மன்மோகன் சிங்கில் ஒன்றுவிட்ட சகோதரர்  தல்ஜீத் சிங் கோலி, தான் பாரதிய ஜனதா கட்சியில் சேர விரும்புவதாக கூறினார். அவரை இன்முகத்துடன் வரவேற்ற மோடி, அவரை பாரதிய ஜனதாவில் சேருவதற்கு அனுமதித்தார்.

இந்த தகவல் அறிந்ததும் மன்மோகன்சிங் கடும் அதிர்ச்சி அடைந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவருடைய குடும்பத்தினர்களும் இந்த செய்தியை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மன்மோகன்சிங்கின் உறவினர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது மன்மோகன்சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர்  தல்ஜீத் சிங் கோலி, பல ஆண்டுகளாக பிரதமருடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தார்.

பிரதமரின் சகோதரரே பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply