shadow

மக்களுக்கு நன்றி கூறி விடைபெற்றார் திரிபுராவின் எளிய முதல்வர் மாணிக் சர்க்கார்

திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் மாணிக் சர்க்கார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் இருந்து விடைபெற்றார்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி வரும் முதல்வர்களின் மத்தியில் சொந்த வீடு கூட இல்லாமல், வெறும் இரண்டரை கிராம் தங்கம் மட்டுமே வைத்துள்ள ஒரு எளிய முதல்வரை அம்மாநில மக்கள் இழந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராஜினாமா கடிதத்தை ஆளுனரிடம் அளித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முடஹ்ல்வர் மாணிக் சர்கார், ”’மக்களும், ஊழியர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால், இத்தனை ஆண்டுகள் நான் ஆட்சியில் நீடித்து இருக்க முடியாது. ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்தபின் , நானும், எனது அமைச்சரவையும் இனியும் ஆட்சியில் தொடர முடியாது என்பதால், ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் இன்று அளித்தேன். இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் அமர வாய்ப்பு அளித்த மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்” என கூறினார்/.

திரிபுராவின் முதல்வர் பதவியை ஏற்கனவே பாஜக கட்சியை சேர்ந்தவர், மாணிக் சர்கார் போலவே எளிமையாக ஆட்சி நடத்தினால், நிச்சயம் அதே 25 ஆண்டுகால ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும்

Leave a Reply