பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 45.பிரபல இசைக் கலைஞரான ஸ்ரீநிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.கடந்த 1998ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பெற்ற இவர் 2010ஆம் ஆண்டு சங்கீத ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர் ஸ்ரீநிவாஸ்.
ஆந்திர மாநிலம் பாலகோலில் 1969 பிப்ரவரி 28 ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீநிவாஸ். 1978ஆம் ஆண்டு முதல் கச்சேரி செய்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பல இசை நிகழ்ச்சிகளை செய்துள்ளார். ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் தென்மேற்கு ஆசிய நாடுகளுக்கும், அமெரிக்க மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் இசை நிகழ்ச்சியை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஸ்ரீனிவாஸ் மியூசி ஆப் வேர்ல்ட் மியூசிக் என்ற இசைப்பள்ளியையும் நடத்தி வருகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.