AICTE அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் மேலாண்மை படிப்பில் சேர AICTE-ஆல் நடத்தப்படும் சிமேட் நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் தேர்வு நடைபெறும்.
தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தேர்வு செப்.,2014ல் நடைபெற்றது. அடுத்த தேர்வு பிப்ரவரி 19 முதல் 22 வரை தேர்வுகள் நடத்தப்படுகிறது.
பொதுப்பிரிவினர் ரூ.1400ம், சிறப்பு பிரிவினர் ரூ.700ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜனவரி 1 கடைசி தேதியாகும்.
கூடுதல் தகவல்களுக்கு www.aicte-cmat.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.