shadow

எனது யோசனையில் ஐந்தில் இரண்டை தான் மோடி செயல்படுத்தியுள்ளார். அனில் போகில் அதிருப்தி

1கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்க பிரதமர் மோடிக்கு ஆலோசனை செய்ய பிரபல நிதி ஆலோசகர் அனில் போகில் அவர்களுக்கு 2 நிமிடங்கள் மட்டுமே மோடி அப்பாயின்மெண்ட் கொடுத்திருந்தார். ஆனால் இந்த சந்திப்பில் அவரது ஆலோசனையை கேட்டு வியப்படைந்து சுமார் இரண்டு மணி நேரம் மோடி அவரிடம் ஆலோசனை செய்தார்.

இதன்படி அனில்போகில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிக்கவும், அதே நேரத்தில் சாமான்ய மக்களுக்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் பிரதமர் மோடிக்கு ஐந்துஅம்ச திட்டம் ஒன்றை அளித்தார். 50 ரூபாய் நோட்டுக்கு மேலே உள்ள அனைத்து அதிக மதிப்புடைய நோட்டுகளையும் தடை செய்து, மத்திய, மாநில அரசுகளின் அனைத்து மறைமுக வரிகளையும் ரத்துசெய்து, பணப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் வங்கிகள் வழியாகவே செய்ய வலியுறுத்துவது, வரிகள் வசூலிப்பத்தை BTT என்னும் வங்கிப் பரிவர்த்தனை மூலமே செயல்படுத்த வைப்பது உள்ளிட்ட இந்த யோசனைகளில் பிரதமர் மோடி இரண்டு அம்சங்களை மட்டுமே செயல்படுத்தியதால் கள்ள நோட்டுக்கள், கருப்புபணம் குறையும் என்றாலும் சாமான்ய மக்கள் திண்டாடுகின்றனர் என்ற தனது அதிருப்தியை அனில் போகில் வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply