மதுவிலக்கு கொள்கையை எதிர்த்து பீகார் முதல்வர் மீது ஷூ வீசிய மர்மநபர் கைது.
சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பதவியேற்ற நிதீஷ்குமார், வரும் ஏப்ரல் முதல் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பெரும்பாலான பொதுமக்களால் வரவேற்கப்பட்டபோதிலும், குடிகாரர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பக்தியார்பூர் என்ற பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்தபோது அவரை நோக்கி பி.கே.ராய் என்ற நபர் ஷூவை கழற்றி வீசினார். ஆனால் அந்த ஷூ அவர் மீது படவில்லை. மதுவிலக்கு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் முதல்வர் மீது ஷூ வீசியதாக கூறப்படுகிறது.
உடனடியாக போலீஸார் பாய்ந்து சென்று ராயை கைது செய்தனர். அவரை பக்தியார்பூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.