செல்போன் பேசிக்கொண்டே பள்ளத்தில் விழுந்த நபர் காயமின்றி தப்பிய அதிசயம்
சீனா நாட்டின் குவாங்சி நகரில் உள்ள சாலையில் திடீரென 32 அடி அகலம் மற்றும் 6 அடி ஆழத்தில் பள்ளம் உருவானது. அதனை அறியாமல் அந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நபர் பள்ளத்தில் வண்டியோடு விழுந்தார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. தானாக பள்ளத்திலிருந்து வெளியேறினார். அவர் செல் போனில் பேசிக் கொண்டு வந்ததால் தான் பள்ளத்தை கவனிக்கமால் விழுந்தார்.
அவர் பள்ளத்தில் விழுந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் 14 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.
//www.youtube.com/watch?v=CS2u_kpTo_8
Leave a Reply
You must be logged in to post a comment.