ஆணுறுப்பில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த வாலிபர்
தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் விஷம், தூக்கு போன்ற வழிகளில் தற்கொலை செய்து கொள்வதுண்டு. ஆனால் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் தனது ஆணுறுப்பில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் முர்ரியா என்ற பகுதியை சேர்ந்த வாலிபர் தற்கொலை முடிவை எடுத்ததும் துப்பாக்கியை தனது இரண்டு கால்களுக்கு இடையே வைத்து ஆணுறுப்பை நோக்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வாலிபரின் மரணம், ஒருசில நாட்களுக்கு பின்னர் துர்வாடை காரணமாக தெரியவந்தது. போலீசார் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அவரது உடல் சிதிலமடைந்தது தெரிந்தது. உடனடியாக பிணத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.