கையும் களவுமாக மனைவியின் கள்ளக்காதலை கண்டுபிடித்த கணவன்
மனைவியின் கள்ளக்காதலை அவருடைய கணவர் கையும் களவுமாக கண்டுபிடிக்க சம்பவமொன்று ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் அருகே நடைபெற்றுள்ளது
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் சேர்ந்த சலீம் என்பவருக்கும் பர்வீன் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்
இந்த நிலையில் சலீம் வீட்டிற்கு ஆட்டோ டிரைவர் ஷாக்கூர் என்பவர் அடிக்கடி வந்து போயுள்ளார். ஆட்டோ டிரைவருக்கும் பர்வீனுக்கு இடையே தொடர்பு இருப்பதாக சலீமுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் மனைவியின் கள்ளக்காதலை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்று அந்த நாளுக்காக காத்திருந்தார்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நாள் வேலைக்கு செல்வதாக வெளியே சென்ற சலீம், சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்த போது பர்வீன் மற்றும் தாக்கூர் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்து அவர்களை கையில் கையும் களவுமாக பிடித்தார். இதனை அடுத்து அங்கிருந்து தப்பியோட முயற்சித்த ஷாக்கூரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.