shadow

மம்தா பானர்ஜியின் திடீர் முடிவால் 3வது அணி தொடங்கும் முன்பே சிக்கல்

வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியும் அமையும் என்றும் இந்த அணிக்கான முயற்சிகளை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் எடுத்து வருவதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி, மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்து அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது

அதாவது மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்விக்கு ஆதரவு அளிக்க மம்தா முடிவு செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது அணி குறித்த பேச்சு நடைபெற்று வரும் நிலையில் அவர் திடீரென காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply