shadow

mamtha angryமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பீகா மாநிலத்தின் புதிய முதல்வராக இன்று பதவியேற்கும் நிதிஷ்குமாரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாட்னாவிற்கு வருகை தந்திருந்தார். அவரிடம் செய்தியாளர்கள் தொழிலதிபர் ஷிபாஜி பன்ஜா குறித்து தொடர்ச்சியாக கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் அவர் செய்தியாளர்கள் மீது கடும் ஆத்திரமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன.

மம்தா பானர்ஜியின் நெருங்கிய நண்பரும், தொழிலதிபரும், திரைபட தயாரிப்பாளருமான ஷிபாஜி பன்ஜா பொருளாதார வழக்கு ஒன்றில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அதன்பின்னர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பீகார் மாநில முதல்வராக மீண்டும் பொறுப்பேற்கும் நிதீஷ்குமாரின் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டு வேகமாக நடந்துச் சென்ற மம்தா பானர்ஜியிடம் மீண்டும் அதே செய்தியாளர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதனால் கடும் ஆத்திரமடைந்த மம்தா, செய்தியாளரின் அருகில் வந்து பதில் கூறினார். ஆனாலும், தொடர்ந்து அந்த செய்தியாளர் மீண்டும் கேள்வி எழுப்பவே, கோபத்தின் உச்சிக்கு சென்ற மம்தா பானர்ஜி, என்னைக் கேள்வி கேட்க நீங்கள் யார்? என்று கேட்டார். மேலும், ஊடகத்தின் இதுபோன்ற அணுகுமுறையை கடுமையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பதவியேற்பு நிகழ்ச்சி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply