shadow

பிரதமர் மோடி எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மலேசிய தமிழர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி சென்னை வந்தபோது அவருக்கு தமிழக எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி கட்டியும் கருப்பு நிற பலூனை பறக்க செய்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிலையில் இந்தோனிசியாவில் இருந்து நேற்று மலேசியாவுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு எதிராக அங்கு வசிக்கும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஸ்டெர்லைட் பிரச்சனையால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில் நேற்று மலேசிய தமிழர்கள் பிரதமர் மோடி வரும் நேரத்தில் ஸ்டெர்லைட் பிரச்னையை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஸ்டெர்லைட்டை தடை செய், தமிழர்களை கொல்லாதே, தமிழ் மண்ணை சிதைக்காதே, மோடி எங்கள் எதிரி என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி கரகோஷம் எழுப்பினர். இதனால் மலேசியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply