shadow

15

கடந்த 8ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு சென்ற MH370 விமானம்  இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று மலேசிய பிரதமர் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் இதுவரை உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்நத வருத்தத்தை தெரிவித்து கொள்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அரசின் ரேடாரில் பதிவாகியிருந்த தகவலின் படி இந்திய பெருங்கடலில் உடைந்த விமான பாகங்கள் இருப்பதாகவும், இந்த கருத்திஅ சீனா உள்பட பல நாடுகள் உறுதி செய்துள்ளதாகவும், அதனால்தான் மலேசிய அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்ற செய்தியை விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்லும்படியும் மலேசிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த இந்தியர்களின் உறவினர்கள் நாளை இந்தியா திரும்புகின்றனர்.

Leave a Reply