ரஜினியுடன் செல்பி எடுத்து கொண்ட மலேசிய அதிபர்
மலேசிய அதிபர் நஜீப் ரசாக் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரஜினியின் மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் இருந்தனர்.
‘கபாலி’ படப்பிடிப்பின்போது மலேசிய அரசு கொடுத்த ஒத்துழைப்பிற்கு ரஜினி இந்த சந்திப்பின்போது நன்றி தெரிவித்தார். மேலும் மலேசிய அரசின் சுற்றுலாத்துறை தூதராக ரஜினி நியமனம் செய்யப்படுவது முற்றிலும் வதந்தி என்று அவர் மறுத்துள்ளார்.
மேலும் இந்த சதிப்பின்போது மலேசிய அதிபரின் விருப்பத்திற்கு இணங்க அவருடன் ரஜினி செல்பி எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.