shadow

நடிகர் கலாபவண் மணி மர்ம மரணம். மதுவில் விஷம் கொடுத்து கொலையா? அதிர்ச்சி தகவல்

Malayalam actor Kalapawan Mani deadபிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் கலாபவண் மணி நேற்று மாலை திடீரென மரணம் அடைந்தார். அவர் தன்னுடைய வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி விழுந்ததாகவும் இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மரணம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அவரது உடலில் மெத்தனால் கலந்த மது இருந்ததாக மருத்துவமனை அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து கலாபவண் மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திரிச்சூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் இதன் முடிவு வந்த பிறகே அவரது மரணத்திற்கு உண்மையான காரணம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

மறைந்த கலாபவன்மணியின் உடலில் மெத்தனால் கலந்த மது இருந்ததாக உறுதி செய்யப்பட்டால் அவருடன் மது அருந்தியவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் அவரது மரணம் கொலையா அல்லது சதியா? என்பது குறித்த சந்தேகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.  

ஜெமினி, அந்நியன், ஏய், எந்திரன், பாபநாசம் உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சுமார் 200 படங்களுக்கும் மேல் கலாபவண் மணி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply