shadow

பாடப்புத்தகத்தில் குற்றவாளி படமா? ஜெயலலிதாவின் படத்தை அழித்தவர்கள் கைது

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பாடப்புத்தக்கத்தில் இருக்கக்கூடாது என்று கூறி அதை அழிக்க முற்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் உள்ள மரக்கடை பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு சென்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்கள் மாணவர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி அதிலிருந்த ஜெயலலிதா படத்தின் மீது திருவள்ளுவர் படத்தை ஓட்டினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலிசார் விரைந்து சென்று ஜெயலலிதா படத்தை மறைப்பதை நிறுத்துமாறு கூறினர். ஆனால்
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம் பாட புத்தகத்தில் இடம்பெற்றால் மாணவர்களுக்கு தவறான பாடம் கற்பிக்கப்படும் என்று கூறி தொடர்ந்து மாணவர்களிடம் புத்தகங்களை வாங்கி திருவள்ளூவர் படத்தை ஒட்டினார்கள்.

இதனால் அந்த அமைப்பின் உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி மரக்கடை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply