shadow

நடிகை பாவனா வழக்கில் மூளையாக செயல்பட்ட குற்றவாளி கைது

பிரபல தமிழ், மற்றும் மலையாள நடிகை பாவனாவுக்கு நேர்ந்த சமீபத்திய அதிர்ச்சி சம்பவம் அனைவரும் அறிந்ததே. இந்த விஷயத்தில் பாவனா துணிச்சலாக புகார் கொடுத்ததை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி சுனில் குமார் என்பவர் சரண் அடைந்திருப்பதாகவும், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் ஓட்டுநர் மார்ட்டின், வடிவால் சலீம், பிரதீப், மணிகண்டன் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி சுனில் கைது செய்யப்பட்டிருப்பது வழக்கு இறுதிக்கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது. விரைவில் இந்த வழக்கில் வேறு யாரேனும் முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்களா? என்பது தெரியவரும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply