நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன். தண்டனையை ரத்து செய்ய சஞ்சய்தத் புதிய மனு
கடந்த 1993ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும்போதே அவர் 3 முறை பரோல் விடுமுறையில் வந்து குடும்பத்தினர்களுடன் சில நாட்கள் இருந்து வந்தார். அவருக்கு விதிமுறைகளை மீறி பரோல் வழங்கியதாக சர்ச்சையும் எழுந்தது
இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் மகாராஷ்டிர ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு புதிய மனு ஒன்றை அனுப்பினார். அந்த மனிவில் தனது குற்றத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், தனது மன்னிப்பை ஏற்று தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் அவரது மனுவை மகாராஷ்டிரா கவர்னர் நிராகரித்துவிட்டார். தண்டனையை ரத்து செய்ய முடியாது என்றும், நீதிமன்றம் விதித்த தண்டனையை சஞ்சய்தத் அனுபவிக்க வேண்டும் என்றும் கவர்னர் தரப்பில் இருந்து பதில் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.