மாறுவேடத்தில் தப்பினேன். ஓபிஎஸ்-க்கு ஆதரவு கொடுத்த மதுரை எம்.எல்.ஏ பேட்டி
தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு 7 எம்.எல்.ஏக்கள் மற்றும் 11 எம்பிக்கள் ஆதரவு இருந்த நிலையில் நேற்று மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன் ஆதரவு கொடுத்துள்ளார். இவரையும் சேர்த்து ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 8 ஆனது.
நேற்றிரவு ஓபிஎஸ் இல்லத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ சரவணன், தான் கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும், சரியான தருணத்தை பயன்படுத்தி மாறுவேடத்தில் தப்பியதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஓபிஎஸ் அவர்களுக்கு மதுரை தொகுதி எம்பி கோபாலகிருஷ்ணன் அவர்களும் நேற்று தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்களின் எண்ணிக்கை 12 ஆனது.
இன்று சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவரவுள்ளதால் கடந்த சில நாட்களாக இருந்த குழப்பிநிலைக்கு இன்று முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.