கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தது. தமிழர்களின் பாரம்பரிய போட்டிக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததால் தமிழக அரசியல் தலைவர்கள் உள்பட பலர் இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதித்த தடையை நீக்கி, போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட 17 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் தமிழக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,
திருச்சி, திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுவை விசாரணை செய்த மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காடி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.