கனமழை எதிரொலி: பல்கலைக்கழகங்கள் தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழையும் பல பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வரும் நிலையில் இன்று நடைபெறவிருந்த ஒருசில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார். மேலும் இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நடத்தப்படும் தேதி குறித்த தகவல் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஆனால் அதே நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பதால் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும் என தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.