shadow

சிம்பு மீதான சம்மனுக்கு இடைக்கால தடை இல்லை. ஐகோர்ட் உத்தரவு
simbu
அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் ‘பீப் சாங் பாடலுக்கு பல எதிர்ப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சிம்பு மற்றும் அனிருத்தை கைது செய்ய வேண்டும் என கோரிக்கையில் பலர் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிம்பு மற்றும் அனிருத் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக நாளை (19-ந் தேதி) கோவை காவல் நிலையத்தில் ஆஜராகவேண்டும் என்று போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு மூத்த வக்கீல் முத்துகுமாரசாமி ஆஜராகி, ‘நடிகர் சிம்பு மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக 19-ந் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று சிம்புக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். எனவே, இந்த வழக்கை ரத்து செய்யவும், போலீசார் அனுப்பியுள்ள இந்த சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி சிம்பு சார்பில் மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்‘ என்று வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் எமிலியாஸ், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கூறினார். இதையடுத்து நீதிபதி, ‘இந்த அவசர வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறேன். அதேநேரம் இப்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்‘ என்று உத்தரவிட்டார்.

சிம்புவின் வழக்கை ரத்து செய்ய நீதிபதி மறுத்துவிட்டதால் சிம்பு நாளை கண்டிப்பாக கோவை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply