சற்குணம் இயக்கத்தில் மாதவன். புதிய தகவல்
‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன நடிகர் மாதவனுக்கு தற்போது ஒருசில பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் மேலும் ஒரு வாய்ப்பாக சற்குணம் இயக்கவுள்ள படத்தில் நடிக்க மாதவன் ஒப்பந்தமாகியுள்ளார்.
களவாணி, ‘வாகை சூடவா’, ‘நய்யாண்டி’, ‘சண்டிவீரன்’ ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் தற்போது விறுவிறுப்பான சிட்டி சப்ஜெக்ட் படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் மாதவன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் சற்குணம் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய இயக்கத்தில் ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில் உண்மை இல்லை என்றும், மாதவனுடன் இணையும் இந்த புதிய படம் வித்தியாசமான கதையை கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.