வர்தா புயலில் சிக்கி சின்னாபின்னமான ‘மாவீரன் கிட்டு’
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாவீரன் கிட்டு’ திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. இந்நிலையில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் விமர்சனத்திற்கு பின்னர் இந்த படத்தின் வசூல் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சுசீந்திரன் சிறிதளவு மாற்றம் செய்தார். ஆயினும் பணத்தட்டுப்பாடு, வர்தா புயல் காரணமாக படத்தின் வசூல் தரை மட்டமானது.
தற்போது கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளில் இருந்தும் ‘மாவீரன் கிட்டு’ தூக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.