தமிழனுக்காக எடுக்கப்பட்ட படம்தான் ‘மாவீரன் கிட்டு’. சுசீந்திரன்
பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நாளை வெளிவரவுள்ள ‘மாவீரன் கிட்டு’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் உருவாக ஒரு தமிழர் காரணம் என்றும் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க இந்த படம் தமிழர்களுக்காக உருவானது என்றும் சுசீந்திரன் செய்தியாளர்களுக்கு எழுதிய ஒரு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியதாவது:
சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஒரு ரசிகர் என்னிடம் உரிமையாக, ‘சார் ஒரு தமிழனா நாங்க எல்லாம் பெருமைபடுகிற மாதிரி ஒரு படம் பண்ணுங்க’ என்றார். அன்று முதல் பல நேரங்களில் அவர் கூறிய அந்த வார்த்தை என்னை யோசிக்க வைத்தது.
மாவீரன் கிட்டு’ இந்திய சினிமாவில் மிகவும் ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். நான் ஒரு தமிழனாய் இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கு பெருமை கொள்கிறேன். இத்திரைப்படம் உருவாக காரணமாக இருந்த அந்த ரசிகருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’
இவ்வாறு இயக்குனர் சுசீந்திரன் தன்னுடைய கடிதத்தில் தெரிவித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.