shadow

ஆகஸ்ட் முதல் ‘மாரி 2’ படப்பிடிப்பு

தனுஷ், காஜல் அகர்வால், விஜய் ஜேசுதாஸ், ரோபோ சங்கர் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய திரைப்படம் ‘மாரி’. இந்த படம் சுமாரான வசூலான போதிலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தனுஷ் முடிவு செய்தார். இதற்கான திரைக்கதையை கடந்த சில மாதங்களுக்கு முன் பாலாஜி மோகன் எழுத தொடங்கினார்.

இந்த நிலையில் ‘மாரி 2’ படத்தின் திரைக்கதை தற்போது தயாராக இருப்பதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இம்மாதம் தொடங்கி, படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘மாரி’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலானோர் இந்த படத்திலும் நடிக்கவிருப்பதாக கூறப்படினும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. ‘மாரி’ படம் ஓரளவுக்காவது பார்க்கும்படி இருந்தது என்றால் அது அனிருத் இசையால் மட்டுமே என்றிருக்க அனிருத் இல்லாத ‘மாரி 2’ ரசிகர்களிடம் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply