15வது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றார் வெங்கய்ய நாயுடு
இந்தியாவின் 15வது குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு சற்று முன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்த வந்த ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. முன்னதாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வெங்கய்ய நாயுடு அபார வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவருக்கு இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. குடியரசுத் தலைவர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக எம்.பிக்களும் விழாவில் பங்கேற்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.