shadow

மு.க. ஸ்டாலின் என்னை மூத்த சகோதரர் போல் எண்ணுகிறார்: வைகோ

திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்ற கட்சி ஆரம்பிக்க காரணமாக இருந்ததே மு.க.ஸ்டாலின் தான் என பல வருடங்களாக அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில் தற்போது மு.க.ஸ்டாலின் தன்னை மூத்த சகோதரர் போல் எண்ணுவதாக வைகோ பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வைகோ இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, ‘தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பல திராவிட இயக்கங்கள் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர். ம.தி.மு.க. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும். நாங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க. அணியில் இருக்கிறோம். தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் என்னை மூத்த சகோதரராக நினைத்து மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் சீமான் குறித்த கேள்வி ஒன்றுக்கு வைகோ பதிலளித்தபோது, ‘ இலங்கை போர் உச்ச கட்டத்தில் இருந்த நேரத்தில் சீமான் போன்ற தலைவர்கள் எல்லாம் களத்திலேயே இல்லை. பிரபாகரனுடன் 5 நிமிடம், 10 நிமிடம் மட்டும் இருந்தவர்கள் இப்போது ஈழப்பிரச்சினைக்கு உரிமை கொண்டாடுகிறார்கள் என்று கூறினார்

Leave a Reply