உண்மையான நட்புக்கு என்றும் முக்கியத்துவம் கொடுப்பேன். மு.க.அழகிரி
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சில நாட்கள் பரபரப்பாக அறிக்கை விட்டுக்கொண்டிருந்த மு.க.அழகிரி, கடந்த சில நாட்களாக அமைதியாக இருக்கின்றார். திமுகவுடன் கூட்டணி சேர எந்த அரசியல் கட்சியும் இதுவரை தயாராக இல்லாத நிலையில், மு.க.அழகிரியும் திமுகவுக்கு எதிராக வேலைசெய்தால், தென்மாவட்டங்களில் திமுகவுக்கு பெரும் பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நாகூரில் தன்னுடைய நெருங்கிய நண்பர் ஷேக் தாவூத் அவர்களின் இல்லத்திருமணத்திற்கு அழகிரி வருகை தந்திருந்தார். அவர் வந்திருப்பதை கேள்விப்பட்டவுடன் அப்பகுதி திமுகவினர் அவரை புறக்கணிக்கும் வகையில் அவர் விழாவில் கலந்து கொண்டு சென்ற பின்னர் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஷேக் தாவூத் இல்லத்திருமண விழாவில் பேசிய அழகிரி, ‘ ”நட்புக்கு இலக்கணமாக விளங்கக் கூடியவர்கள் ஒரு சிலர் தான். நான் ஆட்சியில் இருந்தால் சிலர் வருவதும், இல்லாவிட்டால் போவதும் வாடிக்கை என்றாலும், என் மீது அன்பு கொண்டிருப்பவர்கள் மாறாத நட்பில் உறுதியாக இருக்கின்றனர். என் மீது அன்பு கொண்டவர்களிடம் நான் என்றும் மாறாத நட்பில் உறுதியாக இருப்பேன்” என்று புறக்கணித்த திமுகவினருக்கு குட்டு வைத்தும், நட்பின் அடிப்படையில் தன்னை அழைத்தவருக்கு நன்றி கூறியும் பேசினார்.
Chennai Today News: M.K. Azhagiri in Nagore marriage function
Leave a Reply
You must be logged in to post a comment.