shadow

சம பலத்தில் அதிமுக-திமுக. ஆட்சியை பிடிப்பது யார்? கருத்துக்கணிப்பில் தகவல்
election
ஒவ்வொரு தேர்தலின்போது லயோலா கல்லூரி தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தி வரும் நிலையில் சமீபத்தில் லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் எஸ்.ராஜநாயகம் தலைமையிலான குழு ஒன்று தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார்? என்பது குறித்த கருத்துக்கணிப்பை எடுத்து அதன் முடிவை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேராசிரியர் எஸ்.ராஜநாயகம் செய்தியாளர்களிடம் கூறியபோது, ” சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தோம். இப்போது, மழை வெள்ள பாதிப்புக்குப் பிறகு மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிய, தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுட்பட்ட 120 சட்டப்பேரவை தொகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்தினோம். இந்தாண்டு ஜனவரி 7 முதல் 19 வரை நடந்த இக்கருத்துக்கணிப்பில் 5 ஆயிரத்து 464 பேர் பங்கேற்றனர்.

தற்போது தேர்தல் வைத்தால் அதிமுகவுக்கு 33.3 சதவீதம் பேர் வாக்களிப்பதாகவும், திமுகவுக்கு 33.1 சதவீதம் பேரும் வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர். இரு கட்சிகளுக்கும் இடையே மிகச்சிறிய வித்தியாசம்தான் உள்ளது. ஆகவே, 2 கட்சிகளும் சம பலத்தில் உள்ளன.

இன்றைக்கு தேர்தல் நடந்தால், தேமுதிகவுக்கு 6 %, பாமகவுக்கு 3.2%, பாஜகவுக்கு 2 %, காங்கிரஸுக்கு 1.8%, மதிமுகவுக்கு 1.5%, இடதுசாரிகளுக்கு 1.2%, விசிகவுக்கு 1.2%, தமாகாவுக்கு 0.4%, முஸ்லிம் லீக், புதிய தமிழகம், நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றுக்கு முறையே 0.3%, சமக, இஜகவுக்கு முறையே 0.2 % என மக்கள் ஆதரவு உள்ளது.

யூகத்தின் அடிப்படையில், எந்த கட்சி தலைமையிலான ஆட்சி அமையும் என்று கேட்டதற்கு திமுகவுக்கு 33.7%, அதிமுகவுக்கு 35.7 %, மக்கள் நலக்கூட்டணிக்கு 5.4%, பாமகவுக்கு ஆட்சி 2.2% என மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும், அதிமுகவுக்கான ஆதரவு கடந்த 2014 நவம்பரில் 43% ஆக இருந்தது. அது, கடந்தாண்டு ஆகஸ்ட்டில் 34.1% ஆகவும், தற்போது 33.3 சதவீதமாகவும் குறைந்துள்ளது. ஆனால், திமுகவுக்கான ஆதரவு கடந்த 2014 நவம்பரில் 26 % என்று இருந்தது. அது, கடந்தாண்டு ஆகஸ்ட்டில் 32.6% ஆகவும், தற்போது 33.1% ஆகவும் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பை வைத்து பார்க்கும்போது வரும் தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply