shadow

மீண்டும் ‘கத்தி’ படத்தை தயாரிக்க லைகா முடிவு?
kaththi
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது. இந்நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், அதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிரஞ்சீவி இதுவரை 149 படங்களில் நடித்துள்ளார். அவரது 150வது படம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதால் அதற்கான கதையை அவர் கடந்த சில மாதங்களாக தேடி வருகிறார். இந்நிலையில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் வெற்றி அவரது கவனத்தை கவர்ந்தது. மேலும் இந்த படத்தில் அரசியல் நெடி சற்று அதிகம் என்பதால் மற்ற நடிகர்கள் தயங்கியதையும் கேள்விப்பட்ட சிரஞ்சீவி அரசியல் செல்வாக்குள்ள தான் இந்த படத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

‘கத்தி’ ரீமேக் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குவார் என்றும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை சிரஞ்சீவியே தயாரிக்கவும் விருப்பப்பட்டாலும் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘லைகா’, சிரஞ்சீவி நடிப்பதாக இருந்தால் தாங்களே தயாரிக்க தயார் என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என கூரப்படுகிறது.

Leave a Reply