பெட்ரோலை அடுத்து கேஸ் விலை திடீர் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் தற்போது சிலிண்டர் கேஸ் விலையும் ஏறியுள்ளதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
சென்னையில் 14.2 கிலோ வீட்டு உபயோக மானிய கியாஸ் சிலிண்டர் விலை 2 ரூபாய் 42 காசும், மானியம் அல்லாத கியாஸ் சிலிண்டர் விலை 49 ரூபாய் 50 காசும் உயர்ந்து இருக்கிறது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் இந்த திடீர் விலையேற்றத்தால் அவதியில் உள்ளனர்.
சென்னையில் ரூ.479.42 ஆக இருந்த மானிய விலை கியாஸ் சிலிண்டர் ரூ.481.84 ஆக உயர்ந்து உள்ளது. இது டெல்லியில் ரூ.493.55 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.496.65 ஆகவும், மும்பையில் ரூ.491.31 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் மானியம் அல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.663-ல் இருந்து ரூ.712.50 ஆக உயர்ந்து உள்ளது. இது டெல்லியில் 698.50 ஆகவும், கொல்கத்தாவில் 723.50 ஆகவும், மும்பையில் 671.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,224-ல் இருந்து ரூ.78 உயர்ந்து ரூ.1,302 ஆகி இருக்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.