திருந்தாத ஜென்மங்கள்: காதலியை சந்திக்க கொரோனா முகாமில் இருந்து தப்பிய வாலிபர்

மதுரையில் சமீபத்தில் கொரோனா முகாமில் இருந்து தப்பிச் சென்ற வாலிபர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்த வாலிபரே தற்போது மீண்டும் கொரோனா முகாமுக்கு திரும்பி வந்துவிட்டார்.

அவரிடம் ஏன் தப்பி சென்றார் என்று விசாரித்தபோது அந்த வாலிபர் தனது காதலியை சந்திக்க முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு போலீஸார்களும் மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒருசில நாட்கள் காதலியை பார்க்காமல் இருக்க முடியாதா? அவர் தப்பி சென்றதால் இன்னும் எத்தனை பேருக்கு கொரோனா பரவியிருக்குமோ என்பதுதான் மருத்துவர்களின் தற்போதைய கவலையாக உள்ளது. இதுபோன்ற திருந்தாத ஜென்மங்கள் இருந்தால் கொரோனாவிடம் இருந்து ஆண்டவனால் கூட மக்களை காப்பாற்ற முடியாது

Leave a Reply