shadow

ஏ.டி.எம்மில் இன்னும் பணம் வரவில்லையா? தொடரும் சோதனைகள்

atm500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்ததால் அன்றாட செலவுக்கு கூட பணமில்லாமல் தவிக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இன்று முதல் ஏ.டி.எம் செயல்படும் என்ற செய்தி மகிழ்ச்சியை கொடுத்தது.

ஆனால் இன்று காலை 10 மணி நிலவரப்படி பெரும்பாலான ஏ.டி.எம்கள் திறக்கப்படவில்லை. ஒருசில ஏ.டி.எம்கள் திறந்திருந்தாலும் அதில் பணம் வரவில்லை. சென்னை அண்ணா சாலையில் உள்ள பல ஏ.டி.எம்களின் ஷட்டர்கள் பாதிமட்டுமே திறந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் இன்றுமுதல் ஏடிஎம் மையங்களில் தேவையான பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இருந்த பொதுமக்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில் இன்னும் ஒருசில மணி நேரத்தில் ஏ.டி.எம்கள் செயல்படும் என்று தெரிவித்தனர்.

கையில் இருந்த பணத்தையும் செலவு செய்து விட்டு அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லாமல் பெரும்பாலானோர் தவித்து வருகின்றனர்.

Leave a Reply