shadow

புத்தர் சிலையை இந்தியாவுக்கு திருப்பி கொடுத்த லண்டன்

12ஆம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை 1961ஆம் ஆண்டு திருடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது லண்டன் போலீஸ் இந்தியாவிடம் அந்த சிலையை ஒப்படைத்துள்ளது.

1961ஆம் ஆண்டு பீகார் மாநிலம் நாளந்தாவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்த 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை உட்பட 14 சிலைகள் திருடுபோனது.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், வெண்கலமும் வெள்ளியும் கொண்டு செய்யப்பட்ட சிறிய புத்தர் சிலை லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தின் கலைத்துறை குற்றங்களை விசாரிக்கும் அர்கா என்ற அமைப்பின் அதிகாரி லிண்டா அல்பெர்ட்சன் மற்றும் இந்தியா பிரைட் புராஜெக்ட் அமைப்பைச் சேர்ந்த விஜய் குமார் ஆகிய இருவரும் இந்த வெண்கல புத்தர் சிலை நாளந்தாவில் திருடப்பட்டதுதான் என உறுதி செய்தனர்.

இதனையடுத்து, லண்டனில் நேற்று நடந்த இந்திய சுதந்திர தினவிழாவின் போது லண்டனின் ஸ்காட்லாந்து யார்டு சிலையை இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளது. விரைவில் இந்த சிலை நாளாந்தாவுக்கு வரவுள்ளது.

Leave a Reply