shadow

9லோக்சபாவின் தலைவர் என்ற பதவியில் இருக்கும் சபாநாயகர் மீரா குமார் அவர்களே ஓட்டுபோட தவறிய விவகாரம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு தேர்தலின்போதும் பொதுமக்கள் அனைவரும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவுறித்தி வருகிறது. இந்நிலையில் சபாநாயகர் மீராகுமார் நேற்று நடந்த தேர்தலில் ஓட்டளிக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து அவருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
சபாநாயகர் மீரா குமார் இந்த பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலம் சசாராம் என்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நேற்று தேர்தல் நடைபெற்றது. தான் போட்டியிடும் தொகுதியில் தேர்தல் நேரத்தில் முறைகேடுகள் ஏதும் நடைபெறுகிறதா என்பதை கவனிக்க மீராகுமார் நேரில் சென்றதால் டெல்லியில் அவர் ஓட்டு போட முடியவில்லை என்று அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக முக்கிய பதவியில் இருக்கும் ஒரு தலைவரே ஓட்டு போடாதது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply