பரபரப்பு தகவல்
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது முடிவுக்கு வர உள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா அல்லது முடிவுக்குக் கொண்டுவரப்படுமா? என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த உள்ள 11 நகரங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த 11 நகரங்களில் தமிழகத்தின் ஒரே ஒரு நகராக சென்னை மட்டுமே உள்ளது என்பதால் தமிழகத்தில் சென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும் மற்ற பகுதிகளில் அதிக பட்ச தளர்வுகள் இருக்கும் என்றும் கருதப்படுகிறது
மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க திட்டமிட்டு உள்ள 11 நகரங்கள் குறித்த தகவல் பின்வருமாறு: டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர், சூரத் மற்றும் இந்தூர்
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.